சொற்களால் ஆனவன்

இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டுத் தொடக்கத்தில் என் நண்பர் நரசிம்மன் மூலமாக இயக்குநர் விக்கிரமாதித்தனின் அறிமுகம் கிடைத்தது. அப்போது அவர் மெட்டி ஒலி நெடுந்தொடரில் இரண்டாவது யூனிட் இயக்குநராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். நான் பத்திரிகைப் பணியில் இருந்து விலகி பதிப்புத் துறையில் ஈடுபடத் தொடங்கியிருந்தேன். தனியே ஒரு தொடரை இயக்குவதற்கான முயற்சிகளில் இருந்த அவரிடம் அப்போது ஒரு கதை சொன்னேன். பிறகு பல சந்தர்ப்பங்களில் பல்வேறு கதைகளைப் பேசினோம். ஒரு நாள் கதீட்ரல் சாலையில் அமெரிக்க தூதரகத்துக்கு எதிர்ப்புறம் நடைபாதையோரம் … Continue reading சொற்களால் ஆனவன்